உங்கள் பதின்மவயதினர் மற்றவர்களை
இணைய வழி கொடுமைப்படுத்துதலைச்
செய்யும்போது என்ன செய்வது

ஜஸ்டின் டபிள்யூ. பட்சின் மற்றும் சமீர் ஹிந்துஜா

உங்கள் பதின்மவயதினர் பிறரை ஆன்லைனில் கொடுமைப்படுத்தியதை கண்டறிந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பல்வேறு வழிகளில், இந்தச் சூழ்நிலையானது உங்கள் பதின்மவயதினர் இலக்காக இருந்தால் இருக்கக்கூடிய சூழ்நிலையை விட மிகவும் சவாலானது. உங்கள் பதின்மவயதினர் ஒருவரை புண்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கலாம் அல்லது செய்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் திறந்த மனதுடன் இருங்கள். ஒரு பெற்றோராகவோ பராமரிப்பாளராகவோ, அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பிக்க நீங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்திருந்த போதிலும் அதற்கு மாறாக எந்தவொரு பதின்மவயதினரையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவறான தேர்வுகளை மேற்கொண்டிருக்கக்கூடும் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் தொடக்கமாக, பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் இந்தச் சிக்கலை வேறு எந்தச் சிக்கலையும் போலவே அணுக வேண்டும்: அமைதியான மற்றும் தெளிவான சிந்தனையுடன். நீங்கள் கோபமாக இருந்தால் (முதலில் நீங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பீர்கள்), மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து, சற்று அமைதியடைந்தவுடன் பிரச்சினையை புதிய கண்ணோட்டத்தில் மறு பரிசீலனை செய்யவும். தற்போதைய சூழ்நிலைக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம் என்பது எதிர்காலத்தில் உங்கள் பதின்மவயதினர் உங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வார்கள் என்பதற்கான திட்டமிடுதலை உறுதி செய்யும்.

நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டறியவும்:

முதலில், என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். இலக்கிடப்பட்டவர் யார்? இலக்கிடப்பட்டவராக, சாட்சியாக அல்லது முதலில் சண்டையைத் தொடங்குபவராக வேறு யாராவது ஈடுபட்டார்களா? இது எவ்வளவு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது? தெரிந்துகொள்வதற்கான, பிரச்சினைக்குரிய கலந்துரையாடல்களின் வரலாறு ஏதேனும் உள்ளதா? தீங்கு விளைவிக்கும் செயலின்(செயல்களின்) நோக்கம் அல்லது ஆரம்பம் என்னவாக இருந்தது? என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி உங்களால் முடிந்தவரை அறிந்துகொள்ள முயற்சிக்கவும். உங்கள் பதின்மவயதினரிடம் பேசுங்கள். அவர்களின் கதையின் முழுமையான வடிவத்தைப் பெறுங்கள். அவர்கள் திறந்த மனதுடன் பேசுவார்கள் என்றும், அவர்களாகவே முன்வருவருவார்கள் என்றும் நம்புவோம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். அதனால்தான் சூழ்நிலையை நீங்களாகவே விசாரிப்பது முக்கியம். வேறு ஒருவர் முதலில் செய்த ஒரு விஷயத்திற்குச் சரியாக பழிவாங்குவதற்காகவே பல இளையோர் இணைய வழி கொடுமைப்படுத்துதலில் ஈடுபடுகின்றனர். உங்கள் பதின்மவயதினர் உங்களிடம் வந்து தங்கள் நண்பர்களிடம் கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முடியும் என்பதை உங்கள் பிள்ளைகள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது, சாத்தியமான முரண்பாடுகள் தூண்டப்பட்டு அதிகபட்சநிலையை அடைவதற்கு முன்பு அதனைத் தடுக்கும் என்று நம்புவோம்.

இணைய வழி கொடுமைப்படுத்துதலில் இருந்து உங்கள் பதின்மவயதினரை தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • என்ன நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என்பதைக் கண்டறியுங்கள்
  • அவர்கள் தீங்கைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • தர்க்கரீதியான விளைவுகளைப் பயன்படுத்துங்கள்
  • அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்கவும்

தர்க்கரீதியான விளைவுகளைப் பயன்படுத்துங்கள்

பெரியவர்களாகிய நாம், ஒவ்வொரு நடத்தைக்கும் - நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் இருப்பதை அறிந்திருக்கிறோம். இயல்பான விளைவு என்பது ஒரு நடத்தையின் விளைவாக (மனித தலையீடு இல்லாமல்) இயல்பாக அல்லது தன்னியக்கமாக நிகழும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் சூடான அடுப்பு பர்னரில் தனது கையை வைத்தால், அவருக்கு தீக்காயம் படும். இருப்பினும், சில இயல்பான விளைவுகள் உள்ளன, அவை மிகவும் பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஒரு பதின்மவயதினர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி, தன்னுடைய இறப்புக்கு அல்லது வேறு ஒருவரின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்த வகையான நடத்தைகளுக்கு, ஒரு தர்க்கரீதியான விளைவைப் பயன்படுத்துவதன் மூலம் இயல்பான விளைவுகளை முன்கூட்டியே தடுப்பது நல்லது - அது ஒருவரின் சாத்தியமுள்ள அபாயத்துடன் நேரடியாக தொடர்புடைய ஒரு விளைவாகும். நமது பதின்மவயதினர் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை நாம் விரும்பமாட்டோம், எனவே அவர்கள் மது அருந்துவது தொடர்பான ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தினால், அவர்கள் பயன்படுத்தாதவாறு சிறிது நேரம் காரை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது கார் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அவர்கள் பார்வையிடுமாறு செய்ய வேண்டும். அதிகபட்ச விளைவுக்கு, நடத்தைக்குப் பிந்தைய விளைவானது முடிந்தவரை விரைவில் நிகழ வேண்டும் (இயல்பான விளைவுகள் பெரும்பாலும் உடனடியாக இருக்கும் என்பதால்). உங்கள் பதின்மவயதினரால் அந்த நடத்தையுடன் தண்டனையை தெளிவாக இணைத்துப் பார்க்க முடிவது அவசியம் ஆகும். தகாத ஆன்லைன் செயல்களுக்கு நமது பதின்மவயதினரை ஒழுங்குபடுத்தும்போது இதே அணுகுமுறையை நாம் பயன்படுத்தலாம். அவர்கள் சமூக ஊடகங்களில் மற்றவர்களைப் பற்றி புண்படுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டால், அவர்கள் தொழில்நுட்பத்திலிருந்து சில நாட்களுக்கு இடைவேளை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கக்கூடும். அவர்கள் மோசமான உரைகளை அனுப்பினால், அவர்கள் சிறிது காலத்திற்கு தங்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் சலுகைகளை இழக்கக்கூடும். நடத்தைகள் ஏன் பொருத்தமற்றவை என்பதையும் சில இயல்பான விளைவுகள் (இலக்கிடப்பட்டவருக்கு தீங்கு, சேதமடைந்த ஆன்லைன் நற்பெயர், பள்ளி இடைநீக்கம் அல்லது வெளியேற்றம், சிறார் குற்றப் பதிவு போன்றவை) என்னவாக இருக்கும் என்பதையும் விளக்குவதை உறுதிப்படுத்தவும்.

பொதுவாக, பெற்றோர்கள் இணைய வழி கொடுமைப்படுத்துதலுக்கு தங்கள் பதிலை கவனமாக சிந்திக்க வேண்டும் – குறிப்பாக அவர்களின் பதின்மவயதினர் முதலில் சண்டையைத் தொடங்குபவராக இருக்கும்போது. நடத்தை தொடரவேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள், எனவே குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதின்மவயதினர் மற்றும் சம்பவம் வித்தியாசமானது, எனவே என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி நீங்கள் முடிந்தவரை அதிகமான தகவல்களை அறிந்துகொள்வது முக்கியம் ஆகும். இதன் மூலம் நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து பதிலளிக்கலாம்.

உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு வேறு நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா?
மாற்றுக
meta

எங்களைப் பின்தொடர்க

facebook ஐகான்
Instagram ஐகான்
Threads ஐகான்
YouTube ஐகான்
Twitter ஐகான்
LinkedIn ஐகான்